#BREAKING: நீட், டாஸ்மாக் போராட்ட வழக்குகள் ரத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

கடந்த ஆட்சியில் அறவழியில் போராடிய மக்கள் மீது தொடரப்பட்ட 868 வழக்குகள் வாபஸ் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு.

கடந்த அதிமுக ஆட்சியில் அறவழியில் நீட் தேர்வுக்கு எதிராகவும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும் போராடியவர்கள் மீது தொடரப்பட்ட 869 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது போடப்பட்ட 446 வழக்குகளும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது தொடரப்பட்ட 422 வழக்குகளும் வாபஸ் பெறுவதாகவும், அதன் மீதான மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும் முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்