#BREAKING: விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு!

பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி நளினி மனு தாக்கல்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். விடுதலை தொடர்பாக விசாரணை நடந்து முடியும் வரை இடைக்காலமாக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் நளினி தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி நளினி மனு தாக்கல் செய்திருக்கிறார். சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மனு தாக்கல் செய்துள்ளது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment