#BREAKING: மஜக நிர்வாகி கொலை வழக்கு – மேலும் 4 பேர் கைது!

வாணியம்பாடியில் மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்துள்ளனர்.

கடந்த 26ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த இம்தியாஸ் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கஞ்சா இருப்பதாகக் தகவல் கிடைத்ததை தொடர்ந்து, காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது, 9 கிலோ கஞ்சா, மூன்று கத்திகள், 10 கைபேசிகள் ஆகியவற்றைக் கைப்பற்றி, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா குறித்த தகவலை மஜக நிர்வாகி வசீம் அக்ரம்தான் காவல் துறையினருக்குக் கூறியது என்று இம்தியாஸ் கூறியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, கடந்த 10ம் தேதி வசீம் அக்ரமை வழிமறித்து, மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டியதால், அதே இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலை வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரைச் சிறந்த பிரசாத் மற்றும் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த டெல்லி குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டது. இந்த நிலையில், வாணியம்பாடியில் வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்துள்ளனர். அதன்படி, நயீம் பாஷா, பைசல் அகமது, யூசப் ஜமால் மற்றும் முகமது அலி ஆகிய 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

வாணியம்பாடியில் வசீம் அக்ரம் கொலை வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 7 பேர் நீதிமன்றங்களில் சரணடைந்தனர் என்பது குறிப்பித்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்