#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..!

இன்று பிற்பகல் லெபனானின் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் ஒரு பெரிய குண்டு வெடிப்பு நடைபெற்றதாக சில உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள்தெரிவித்துள்ளது. ஆனால், சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய உடனடி தகவல் எதுவும் வெளியவில்லை.

துறைமுகத்தில் இருந்து நூறு அடி தூரத்தில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குண்டுவெடிப்பை அடுத்து நகரத்தில் ஒரு சிவப்பு புகை வெளியேறியது. தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க முயற்சி செய்து வருகிறது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

 

author avatar
murugan