#BREAKING: மூணாறு நிலச்சரிவு..உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு.!

கேரள நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இதுவரை 14 சடலங்கள் மீட்பு.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா நகரமான மூணாறில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள  ராஜமலை பகுதியில்  இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 12 பேர் மீட்கப்பட்டு  பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் 70 முதல் 80 பேர் வரை  வசித்து வந்தனர் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த  நிலச்சரிவில் இன்னும் எத்தனை பேர் சேற்றுக்குள் சிக்கியுள்ளார்கள் என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இவர்கள் இருக்கும் பகுதியை  இணைக்கும் பாலம் நேற்று அடித்துச் செல்லப்பட்டதால், இப்பகுதியில்  மீட்பு குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளா நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களில் 9 பேர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. காலை நிலச்சரிவு ஏற்பட்ட  இடத்திலிருந்து 5 பேர் சடலங்களாக  மீட்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan