#BREAKING: ஹெலிகாப்டர் வீடியோ உண்மையா? – செல்போன் ஆய்வு!

ஹெலிகாப்டரின் கடைசி நிமிட வீடியோ உண்மைதானா என கண்டறிய செல்போனை ஆய்வு செய்கிறது காவல்துறை.

கடந்த 8-ஆம் தேதி குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, விபத்து நடந்த அன்று, அங்கு சுற்றுலா சென்ற பயணிகள் சிலர் ஹெலிகாப்டர் விபத்தை கடைசியாக எடுத்த வீடியோ காட்சி என்று இணையத்தில் வெளியிட்டிருந்தனர்.

இந்த கடைசி நிமிட வீடியோ குறித்து எந்தவித உண்மையும் விமானப்படை சார்பில் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தை கடைசியாக படம் பிடித்த நபரின் செல்போன் காட்சி உண்மையா? என்பதை ஆய்வு செய்ய கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு போலீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் உயர் மின்னழுத்த கம்பி உள்ளதா என மின்வாரியத்திடம் நீலகிரி மாவட்ட காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது என்றும் விபத்தின் போது நிலவிய வானிலை குறித்து தகவல் தர சென்னை வானிலை மையத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்