#Breaking:தலைக்கவசம் அணியாமல் வந்தால்;மது,அரசு சேவை கிடையாது – மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

#Breaking:தலைக்கவசம் அணியாமல் வந்தால்;மது,அரசு சேவை கிடையாது – மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

கரூர்:தலைக்கவசம் அணியாமல் வந்தால் அரசு அலுவலகங்களில் எந்தவித சேவையையும் பெற முடியாது என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

வருகின்ற 18 ஆம் தேதி முதல் இரு சக்கரவாகனங்களில் அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என கரூர் மாவட்ட அட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாறாக, தலைக்கவசம் அணியாமல் வந்தால் அரசு அலுவலகங்களில் எந்தவித சேவையையும் பெற முடியாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக,டாஸ்மாக் கடைகளுக்கு தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மது பாட்டில் வழங்கக் கூடாது எனவும்,அரசு அலுவலகம் மட்டுமல்லாமல்,பெட்ரோல் பங்க்,உணகவங்கள் ஆகிய இடங்களிலும் தலைக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு பலகை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube