#BREAKING: இழப்பை ஏற்படுத்தினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

#BREAKING: இழப்பை ஏற்படுத்தினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

அரசு போக்குவரத்து கழகங்களில் முறையாக பணி செய்யாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப போக்குவரத்துத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆணையிட்டார்.

சைதை பணிமனை நடத்துனர் பாலசந்தர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு பிறகான பணி நீக்கத்துக்கு ஒப்புதல் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர் நலத்துறை ஆணையம் துணை ஆணையர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வழக்கு தொடுத்துள்ளது. அதில், ஊதிய பிரச்சனை தொடர்பான பணிநீக்கம் என்பதால் துணை ஆணையர் ஓப்புதல் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. எனவே, தொழிலாளர் நலத்துறை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *