#Breaking : ஓ.என்.வி விருதை திரும்ப தருகிறேன்…! கவிஞர் வைரமுத்து அறிவிப்பு…!

கேரளாவின் உயரிய விருதான ஓ.என்.வி இலக்கிய விருதை திருப்பி தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிரபல மலையாள கவிஞரும், பாடலாசிரியருமானவர் ஓ.என்.வி. குறுப். ஞானபீட விருது பெற்ற அவரின் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஓ.என்.வி. இந்த ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்கப்படுகிறது. இதனையடுத்து, இந்த ஆண்டிற்கான ஓ.என்.வி விருதை கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்குவதாக கடந்த 26 ஆம் தேதியன்று ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிவித்தது.

பிரபல நடிகை பார்வதி, பாடகி சின்மயி, இயக்குனர் அஞ்சலி மேனன், நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ், நடிகை ரிமா ஆகியோர், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு இலக்கியத்தில் சிறந்த ஓ.என்.வி விருதை வழங்குவதை எதிர்ப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து,  கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ஓ.என்.வி விருதை மறுபரிசீலனை செய்வதாக ஓ.என்.வி கலாச்சார அகாடமி தலைவர் அடூர் கோபாலகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து கேரளாவின் உயரிய விருதான ஓ.என்.வி இலக்கிய விருதை திருப்பி தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘

அனைவரையும் வணங்குகிறேன்.

கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது; நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.

ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த ருது. மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப் விரு பட்டிருப்பதாய் அறிகிறேன்.

இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி. குரூப்பையும் சிறுமைப்

படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.

அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்,

ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன் நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்; அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.

ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன் எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும்

அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய்

2லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட

முறையில் நான் வழங்குகிறேன்.

தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும்.

இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும். ஊடக உறவுகளுக்கும் என் நன்றி.’ என தெரிவித்துள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

என்னையாவா ஒதுக்கிறீங்க ? சொல்லி அடிக்கும் சாஹல் .. ஐபிஎல்லில் புதிய மைல்கல் !!

Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த…

2 mins ago

சம்பளமே வேண்டாம்! விஜய்க்காக விஜயகாந்த் செய்த உதவி?

Vijayakanth : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்  நஷ்டத்தால் மூழ்கிய போது அவருக்கும், விஜய்க்கும்  விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் பல தயாரிப்பாளர்களுக்கு, பல இயக்குனர்களுக்கு…

40 mins ago

உண்மையை சொன்னேன்… பயத்தில் மூழ்கிய I.N.D.I.A கூட்டணி.! – பிரதமர் மோடி.

PM Modi : உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது என பிரதமர் மோடி ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25…

1 hour ago

செல்வராகவன் கெட்டவார்த்தை போட்டு திட்டி விரட்டிட்டாரு! பாவா லட்சுமணன் வேதனை!

Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என…

1 hour ago

மக்களே கவனம்!! தமிழகத்தில் வெப்ப அலை வீசும்…மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Weather Update: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும். தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம்…

2 hours ago

320-ஐ எட்டியது சர்க்கரை அளவு…சிறையில் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி.!

Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…

3 hours ago