#BREAKING: தெலுங்கானாவில் நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்து.

தெலுங்கானாவில் நாளை முதல் 8, 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனாவின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளை இப்போதைக்குத் திறக்க வேண்டாம் என கூறியுள்ளது. அக்டோபர் 4ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்து, ஆஃப்லைன் வகுப்புகளை நடத்தாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், அடுத்த வாரத்திற்குள் பள்ளிகள் திறப்பதற்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு கல்வித் துறைக்கு உத்தரவிட்டு, நேரடி கற்பிக்கும் பள்ளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. குருகுலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் விடுதிகளைத் திறக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்