#Breaking:தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை;எந்தெந்த மாவட்டங்கள்? – வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அந்த வகையில், இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,நீலகிரி,கோவை,திருப்பூர்,திண்டுக்கல்,தேனி,கன்னியாக்குமரி,தென்காசி,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும்,தென் கிழக்கு அரபிக்கடல்,இலட்சத்தீவு,கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல்,தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகள்,மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.இடையிடையே 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

Leave a Comment