#BREAKING: தங்கக் கடத்தல் – ஸ்வப்னாவிற்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்.!

கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலை ஆய்வு செய்தனர். அதில் சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த  தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். அதனையடுத்து, பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பெங்களுருவில் நேற்று இரவு ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை கைது செய்து இன்று மதியம் என்ஐஏ அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து, அவரை கொச்சினில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இந்நிலையில், தங்கக்கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டது.

author avatar
murugan