முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்றவருமான யஷ்பால் சர்மா தனது 66 வயதில் மாரடைப்பால் காலமானார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், 1983ல் உலக வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த யஷ்பால் சர்மா தனது 66 வயதில் மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். இவருக்கு மனைவி ரேணு சர்மா, இரண்டு மகள்கள் பூஜா, ப்ரீத்தி மற்றும் மகன் சிராக் சர்மா உள்ளனர்.
70களின் பிற்பகுதியிலும், 80களின் பிற்பகுதியிலும் ஒரு சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையில், ஆகஸ்ட் 11, 1954இல் லூதியானாவில் பிறந்த 66 வயதான யஷ்பால் சர்மா முன்னாள் பஞ்சாப் கிரிக்கெட் வீரர், ஒரு திறமையான நடுத்தர வரிசை பேட்ஸ்மேனாக கருதப்பட்டார்.
இந்தியாவுக்காக அவர் 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1979 இல் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார். யஷ்பால் இரண்டு சதங்களுடன் 1606 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சம் 140 ரன்களும், சராசரி 33.45 ரன்களும், ஒன்பது அரைசதங்கள் வைத்துள்ளார்.
1978ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதே நேரத்தில் 42 போட்டிகளில் 28.48 சராசரியாக 883 ரன்கள் எடுத்துள்ளார். ஹரியானா, ரயில்வே உள்ளிட்ட மூன்று அணிகளை பிரதிநிதித்துவப்படுத்திய ரஞ்சியில், யஷ்பால் 160 போட்டிகளில் விளையாடியபோது 8, 933 ரன்கள் எடுத்தார். அதில், 21 சதங்கள் அடங்கும் மற்றும் அதிகபட்ச 201 ரன்கள் விளாசியுள்ளார்.
1983 உலகக் கோப்பையில், இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் வெற்றியுடன் தொடங்கியது. இதில் சர்மா முக்கிய பங்கு வகித்தார். சர்மா 120 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். இது தவிர, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 40 ரன்களும், கடினமான சூழலில் இங்கிலாந்துக்கு எதிராக 61 ரன்கள் விளாசினார். இறுதியாக இந்தியா உலகக் கோப்பையை வென்றது.
தனது ஓய்வுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ), பஞ்சாப் மற்றும் ஹரியானா கிரிக்கெட் அணியில் பல்வேறு விதமாக செயல்பட்டார். மேலும் இந்திய டிவியில் கிரிக்கெட் நிபுணராகவும் பணியாற்றினார். இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக இன்று யஷ்பால் சர்மா காலமானார். இவரது மறைவிற்கு முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…