#BREAKING: மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு..!

43 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை 6 படகுகளையும், 43 மீனவர்களையும் சிறைபிடித்தது. 43 மீனவர்களையும் இலங்கை கடற்படை நெடுந்தீவுக்கு அழைத்து சென்று தனிமைப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 43 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

மேலும், நாளை காலை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசு விரைந்து 43 மீனவர்கள் மற்றும் 6 படகுகளையும் விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

author avatar
murugan