#BREAKING: ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடகாவில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு.

கர்நாடகாவில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 23ம் தேதி முதல் பள்ளிகளில் வகுப்புகள் துவக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று நடைபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடனான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் இரவு முழுவதும் ஊரடங்கு நேரத்தை மாநிலம் முழுவதும் நீட்டிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு இருந்த நிலையில், தற்போது நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இதற்கு முன் ஹிமாச்சலப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

அய்யா! பும்ரா பந்தை அடிச்சிட்டேன்! அசுதோஷ் சர்மா உற்சாக பேச்சு!

ஐபிஎல் 2024  : பும்ரா பந்தை அடித்ததன் மூலம் என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என அசுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்…

5 mins ago

அடடே.! பீட்ரூட்டை வைத்து ரசம் கூட செய்யலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

பீட்ரூட் ரசம் -பீட்ரூட் ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். பீட்ரூட்டை ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில்  தினமும்  சேர்த்து கொண்டோம் என்றால்  ரத்த…

9 mins ago

ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்… அதிகாலை நடந்த பரபரப்பு சம்பவம்!

Iran Israel Conflict: ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர்…

14 mins ago

மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கி சூடு.! பதற்றத்தில் வாக்காளர்கள்…

Election2024 : மணிப்பூர் வாக்குச்சாவடியில் மர்மநபர்கள் தூப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில்…

17 mins ago

வாக்களித்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான…

47 mins ago

சேலத்தில் வாக்களிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு ..!

Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

58 mins ago