#Breaking:பரபரப்பு…திமுகவினரின் இருக்கைகளில் அமர்ந்த அதிமுகவினர்!

மதுரை மாநகராட்சிக்கான நடப்பு ஆண்டிற்கான  பட்ஜெட்டை மேயர் இந்திராணி தாக்கல் இன்னும் சற்று நேரத்தில் செய்ய இருந்த நிலையில்,மதுரையில் உள்ள அனைத்து வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்களும் அறிஞர் அண்ணா மாளிகைக்கு வருகை புரிந்துள்ளனர்.

இந்நிலையில்,திமுக கவுன்சிலர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அதிமுக கவுன்சிலர்கள் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.இதனையடுத்து,உரிய இருக்கைகளில் அமர வேண்டும் என மாமன்ற செயலாளர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால்,அதனை மீறியும் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குவாதம் நீடித்த நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் பட்ஜெட் தாக்கல் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.இதனால பட்ஜெட் தாக்கல் நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.