#BREAKING : கொரோனாவிலிருந்து மீண்டார் ஈவிகேஸ் இளங்கோவன்..! மருத்துவமனை அறிக்கை…!

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் இவிகேஎஸ் இளங்கோவன்.

ஈரோடு கிழக்கு எம்எல்ஏ இ.வி.கே.இளங்கோவன் அவர்கள் கடந்த 15-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் இதற்கு சிகிச்சை அளித்தனர்.

தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இருதய பிரச்சினை தொடர்பாக ஐ சி யூ-வில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment