#BREAKING : தேர்தல் தோல்விக்கு பின் முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்த ஈபிஎஸ் – ஓபிஎஸ்…!

தேர்தல் தோல்விக்கு பின் முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்த ஈபிஎஸ் – ஓபிஎஸ்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த சந்திப்பின் போது, அதிமுக மூத்த தலைவர்கள் மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், தம்பி துறை உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது, அரசு மற்றும் அரசியல் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளது.

அதன்படி, சசிகலா விவகாரம், அதிமுக – பாஜக கூட்டணி, அரசியல் சூழல், உள்ளாட்சி தேர்தல், மேகதாது விவகாரம், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியடைந்த பின் முதல்முறையாக ஈபிஎஸ் – ஓபிஎஸ் சந்தித்து பேசுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.