#BREAKING: தமிழகத்தில் ஏப்ரல் 6 -ஆம் தேதி தேர்தல்.. சுனில் அரோரா அறிவிப்பு..!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என  சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளன.  இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தொகுதி பங்கீடு, கூட்டணி  பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, 5 மாநிலத்திற்கும் தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்க தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் 5 மாநிலங்களிலும் நேரில் ஆய்வு நடத்தினர்.

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும், ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். மேலும், வேட்புமனு தாக்கல் மார்ச் 12 நடைபெறும் எனவும், வேட்புமனு மீதான பரிசீலனை – மார்ச் 20 தேதி, வாக்கு என்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.

 

 

 

author avatar
murugan