#BREAKING: 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை – அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வழக்கமான வகுப்புகளுக்கு வருகை தர வேண்டியதில்லை என அறிவிப்பு.

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று சட்டபேரவை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வெழுத மட்டுமே பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என்றும் தேர்வு இல்லாத நாட்களில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடும் வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்