டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய திமுக அலுவலக திறப்பு விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திமுக அழைப்பு.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய திமுக அலுவலகம், வரும் செப்.17 அல்லது 18-ஆம் தேதி திமுக அலுவலகம் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி மூலம், திமுக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வுக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வர், சட்டீஸ்கர் முதல்வர் உள்ளிட்ட பிற மாநில முதல்வர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதைத்தவிர இடதுசாரி கட்சிகளின் தலைவர்களையும் இந்த திறப்பு விழாவிற்கும் அழைப்பு விடுக்கவுள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் திமுக தலைவர்களை முறைப்படி அழைப்பு விடுக்க உள்ளனர்.
மேலும், இந்த விழாவில் தமிழக முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியானது, எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு மாநில கட்சியாக இருந்து திமுகவும் தொடர்ந்து இந்த பணிகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பட்சத்தில், இந்நிகழ்ச்சி தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக கருதப்படும்.
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …
Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…
West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…
Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…