#BREAKING : முதல்வருக்கு கடிதம் எழுதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து  வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், குடியரசு தின அணிவகுப்பு விழாவில் கலந்துகொள்ளும் அலங்கார ஊர்திகளை தேர்வு செய்வதற்காக தெளிவான வழி முறைகள் கடைபிடிக்கப்படுகிறது . முதல் மூன்று சுற்றுகள் வரை தமிழக ஊர்தி பரிசீலிக்கப்பட்டது, இறுதிப் பட்டியலில் தமிழக ஊர்தி இடம் பெறவில்லை. நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே குடியரசு தின அணிவகுப்புக்கான ஊர்தி தேர்வு செய்யப்பட்டது.  2017, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தமிழக ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.