#Breaking: சென்னையில் மேலும் 559 பேருக்கு கொரோனா!

சென்னையில் மேலும் 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் இன்று புதிதாய் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 106 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6,304 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 6,351 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.