#Breaking : கொரோனா தடுப்பு மருந்து 90% வெற்றி!

#Breaking : கொரோனா தடுப்பு மருந்து 90% வெற்றி!

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் 90% வெற்றி. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெர்மனியில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் 90% வெற்றியை பெற்றுள்ளதாக pfizer நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வை, ஃபிஃசர் மற்றும் பயோடெக் நிறுவனங்கள் மேற்கொண்டனர். இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, 6 நாடுகளில் 43,500 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டதாகவும், தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களில் இதுவரை யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube