#BREAKING: மத்திய சிறையில் இரு கைதிகளுக்கு கொரோனா.!

#BREAKING: மத்திய சிறையில் இரு கைதிகளுக்கு கொரோனா.!

கடலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதையடுத்து, கடலூர் மாவட்டத்தில் இதுவரை 427 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், இவர்களில் 412 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். அதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கடலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சிறைப்பகுதிகளை தூய்மைப்படுத்துவதில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube