#Breaking: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,384 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1072 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை அங்கு 18,693 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் இன்று 585 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 14,901 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 16,447 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5,44,981 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் 12,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று பாதிக்கப்பட்ட 1,384 பேரில் 11 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.