#BREAKING :பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் கொரோனா பரவியது.!

#BREAKING :பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் கொரோனா பரவியது.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி அருகே நல்லூரை சேர்ந்த 67 வயதான முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவருடன் வந்த மேலும் மூன்று பேர், அவரின் உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட நபரின் நல்லூர் கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பச்சை மண்டலத்தில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவியதால் கிருஷ்ணகிரி ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube