தமிழகத்தில் இன்று 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
தமிழகத்தில் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,981 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று 2 ஆயிரம் அதிகரித்து 10,978 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துவங்கும் என்றும் முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 15.38 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 14,63,875 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு 74,805 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…