#BREAKING : தமிழகத்தில் 18 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு..!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,934 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சில புதிய கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,934 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,47,589 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,039 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 7,372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.