#BREAKING: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா உறுதி!

பட்ஜெட் கூட்டத்தொடர் 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

ஹைதராபாத்தில் உள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து வெங்கையா நாயுடு தனிமைப்படுத்திக்கொண்டார். தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் 875 ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதன்படி, மாநிலங்களைவை செயலகத்தில் 271 ஊழியர்கள் என மொத்தம் 875 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்