#Breaking: சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8000ஐ தாண்டியது!

சென்னையில் ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை  8,228 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று புதிதாய் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை  13,191 ஆக உயர்ந்துள்ளது. இன்று 3பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,882 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8,228ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், மொத்தமாக 59 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,823 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக, 5,345 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.