#BREAKING: இங்கு நாளை முதல் சினிமா படப்பிடிப்புக்கு தடை – தோட்டக்கலைத்துறை

#BREAKING: இங்கு நாளை முதல் சினிமா படப்பிடிப்புக்கு தடை – தோட்டக்கலைத்துறை

நீலகிரில் உள்ள சுற்றுலா தளங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்புகளுக்கு நடத்த தடை விதிப்பு.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்புகள் நடத்த தடை விதித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. கோடை சீசனை ஒட்டி சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

கோடை சீசன் முடிந்ததும் ஜூலை 1 முதல் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் நீலகிரி மாவட்டம் தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னுர் சிம்ஸ் பூங்கா பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube