#BREAKING : சுதந்திரத்தினத்தை முன்னிட்டு முதன்முறையாக கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சுதந்திரதினத்தை முன்னிட்டு முதன்முறையாக கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திறந்த ஜீப்பில் நின்றவாறு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசிய கோடியை ஏற்றியுள்ளார். அதன்பின் மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி வருகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.