மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இன்று பலரும் நீரழிவு, ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் மாதந்தோறும் சிகிச்சை பெற்று வருவதோடு, மாத்திரைகளும் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் சிறுநீரக செயலிழப்பால் ஏராளமானோர் வாரத்துக்கு ஒரு முறையாவது டயாலிஸிஸ் செய்து வருகின்றனர்.
இந்த நோயாளிகளில் பலர் பல காரணங்களால் முறையாக தொடர்ச்சியான சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை இதனால் ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வீடு வீடாக சென்று மருத்துவ சிகிச்சை அளித்து தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குவதற்கும், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோருக்கு கையடக்க கருவிகளுடன் வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிப்பது, பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படுவோருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்காக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சமன்பள்ளியில், ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சரோஜாவின் இல்லத்திற்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கினார்.
மேலும்,பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சந்திரசேகரின் இல்லத்திற்கே சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கினார். அதேபோல், மூக்கனூரை சேர்ந்த கால்கள் இழந்த இருவருக்கு செயற்கை கால்களை வழங்கினார். அதனை தொடர்ந்து, சூளகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 108 ஆம்புலன்ஸையும் வழங்கியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…