#BREAKING : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

#BREAKING : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இன்று பலரும் நீரழிவு, ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் மாதந்தோறும் சிகிச்சை பெற்று வருவதோடு, மாத்திரைகளும் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் சிறுநீரக செயலிழப்பால் ஏராளமானோர் வாரத்துக்கு ஒரு முறையாவது டயாலிஸிஸ் செய்து வருகின்றனர்.

இந்த நோயாளிகளில் பலர் பல காரணங்களால் முறையாக தொடர்ச்சியான சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை இதனால் ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வீடு வீடாக சென்று மருத்துவ சிகிச்சை அளித்து தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குவதற்கும், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோருக்கு கையடக்க கருவிகளுடன் வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிப்பது, பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படுவோருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்காக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சமன்பள்ளியில், ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சரோஜாவின் இல்லத்திற்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கினார்.

மேலும்,பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சந்திரசேகரின் இல்லத்திற்கே சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கினார். அதேபோல், மூக்கனூரை சேர்ந்த கால்கள் இழந்த இருவருக்கு செயற்கை கால்களை வழங்கினார். அதனை தொடர்ந்து, சூளகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 108 ஆம்புலன்ஸையும் வழங்கியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube