#BREAKING: சென்னை டெஸ்ட் போட்டி – ரசிகர்களுக்கு அனுமதி.!

சென்னையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரையிலும், 2 வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.

சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதி இல்லை என்று தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பிப் 28 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கிரிக்கெட் உட்பட அனைத்து போட்டிகளையும் காண 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கலாம் என அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு கிரிக்கெட் போட்டிகளை காண மைதானத்தில் 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, பிப்.13ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண 50 சதவீத  ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் அகமதாபாத்தில் நடைபெறும் 3,4வது டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்