#Breaking : இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு …!

தமிழகத்தில் இன்று தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த பல நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை தொடரும் எனவும், மீனவர்கள் குமரி கடல், தெற்கு அந்தமான் மற்றும் வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.

author avatar
Rebekal