#Breaking : 5 நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்…!

ஐந்து நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்தும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை, செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

மேலும், குடியரசுத் தலைவர் சென்னை வர உள்ள நிலையில், இது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் பெட்ரோனாஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.