#Breaking:தேச விரோத சக்திகள்;தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பட்டறை – திமுக செயலாளர்கள் தீர்மானம்!

சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல்,மதவாத நச்சு விதைகளைத் தூவிட முயற்சி அபாயகர சக்திகள்,அவர்களுக்குத் துணை போகும் அடிமைகளிடமிருந்து தமிழகத்தை சேதாரமின்றி பாதுகாக்க வேண்டும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும்,அபாயகரமான சக்திகளை அடையாளம் காட்டிடும் வகையில் தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பட்டறைகளை நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாள் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.மேலும்,சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் கருணாநிதி அவர்களின் சிலை திறக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கலைஞரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும், தேச விரோத சக்திகளிடமிருந்து  தமிழகத்தை பாதுகாப்போம் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூடத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.மேலும்,உட்கட்சி தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Leave a Comment