மதுரையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை மீட்பு.
மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனை சிவக்குமார் என்பவர் நடத்தி வரும் நிலையில், இங்கு 70-க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பெண்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூறி, மாணிக்கம் என்ற ஒரு வயது சிறுவனை அதிக விலைக்கு விற்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் அக்குழந்தையை மீட்டனர். அதனை தொடர்ந்து, ஸ்ரீதேவி என்பவரின் பெண் குழந்தையும் விற்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த குழந்தையையும் போலீசார் மீட்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த குழந்தை இதயம் அறக்கட்டளையில் வாங்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த இதயம் அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…