மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக அரிசி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
சற்று நேரத்திற்கு முன் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். அதில், 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், இந்த இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்காக 90,000 கோடி ரூபாய் செலவிடப்படும் என கூறினார்.