#BREAKING: நாளை அனைத்து கட்சி கூட்டம் – முதல்வர் பழனிசாமி அழைப்பு!!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு.

சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நாளை காலை 9.15 மணிக்கு நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்த நிலையில், அது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், கூட்டம் நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாமே என கூறி, இதுதொடர்பாக தமிழக அரசு நாளை விளக்கமளிக்குமாறு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்து என்பது குறிப்பிடத்தக்கது.