#BREAKING : விஷச்சாராய மரணங்கள் – ஆளுநரை சந்திக்க அதிமுக முடிவு…!

#BREAKING : விஷச்சாராய மரணங்கள் – ஆளுநரை சந்திக்க அதிமுக முடிவு…!

Edappadi K. Palaniswami

விஷச்சாராய உயிரிழப்பு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிக புகாரளிக்க முடிவு செய்துள்ளது.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து ஆளுநரை சந்தித்து புகாரளிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் ஆர்.என் ரவி அறிக்கை கேட்டுள்ள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube