#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு – ஆக.4ல் விசாரணை!

அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என அறிவிப்பு.

ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வழக்கு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 4) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரிக்க உள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கை 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதுபோன்று உட்கட்சி தேர்தலுக்கு எதிரான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி வழக்குகள் ஆகஸ்ட் 16-ல் விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Castro Murugan

Leave a Comment