#BREAKING: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு. 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கினர். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள் ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

69 சதவீத இடஒதுக்கீட்டுக்குள்தான் 7.5 சதவீத ஒதுக்கீடு வரும் என்று தமிழக அரசு தரப்பில் முன்வைத்த வாதத்தை ஏற்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5% உள் ஒதுக்கீட்டை 5 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் போல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக ஆட்சியில் மருத்துவ படிப்பில் மட்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்