#BREAKING: ஜனவரி 11 வரை 50% இருக்கை – உயர்நீதிமன்றம் உத்தரவு.!

ஜனவரி 11-ஆம் தேதி வரை 50% இருக்கைகளுடன் தான் திரையரங்குகள் இயங்க அனுமதி என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

தமிழகத்தில் ஜனவரி 11-ஆம் தேதி வரை 50% இருக்கைகளுடன் தான் திரையரங்குகள் இயங்க அனுமதி என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காலத்தில் பொருளாதார சிக்கலுகளுக்கு அதி முக்கியத்துவம் அளிக்க இயலாது. 50% இருக்கைகளுடன் காட்சிகளை அதிகப்படுத்துவது தொடர்பாக ஜனவரி 11க்குள் பதில் தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

திரையரங்குகளில் 100% இருக்ககைகளை அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 100% இருக்கை விவகாரத்தை தமிழக அரசு சரியான முறையில் பரிசீலித்து முடுவெடுக்கும் என நம்புகிறோம் என்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை குறிப்பிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்