#BREAKING: சென்னையில் ஆகஸ்ட் -31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு.!

சென்னையில் 144 தடை உத்தரவை நீட்டித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு நீட்டிப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்ட வருவதால் மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பபட்டுள்ளது.

ஆகஸ்ட் 31 வரை சென்னையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்துள்ளார் .

இந்நிலையில் சென்னையில் பொது இடங்களில் 5 க்கும் மேற்பட்ட மக்கள் கூட தடை தொடருகிறது . மேலும்  மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆகஸ்ட்31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு என  காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.