#BREAKING: தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 118 பேர் பலி.!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4800-ஐ தாண்டியது.

தமிழகத்தில் மேலும் 5,883 பேருக்கு கொரோனா. இதனால்  பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 986 பேருக்கு கொரோனா இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,08,124-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 118 பேர் உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,808-ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களில் 81 பேர் அரசு மருத்துவமனையிலும், 37 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர.

தமிழகத்தில் இன்று மட்டும் 5,043-பேர் குணமடைந்து வீடு திரும்பியுல்லாதால். இதுவரை 2,32,618-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.