#BREAKING: தமிழகத்தில் 100-ஐ தாண்டிய உயிரிழப்பு .!

தமிழகத்தில் இன்று 5 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 103  ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 49பேர் உட்பட இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 15, 512  ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 9,989 ஆக அதிகரித்துள்ளது எனவும் இன்று மட்டும் 363 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 7,491 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று 5 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 103  ஆக உயர்ந்துள்ளது .

 

 

author avatar
Dinasuvadu desk