கரடியை எதிர்த்த துணிச்சல் சிறுமி..!

கரடியை எதிர்த்த துணிச்சல் சிறுமி..!

தான் செல்லமாக வளர்த்த நாய்க்குட்டிகளை காப்பாற்ற சிறுமி ஒருவர் கரடியுடன் போராடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவில் வசிக்கும் சிறுமி செல்லமாக வீட்டில் நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். இந்த சிறுமியின் வயது 17.  இவரது வீட்டில் உள்ள சுவற்றில் கரடி ஒன்று தனது குட்டிகளுடன் நடந்து சென்றுள்ளது. அப்போது வீட்டில் வளர்த்த நாய்கள் அனைத்தும் கரடியை பார்த்து குரைக்க ஆரம்பித்துள்ளன. இதனால் கரடி நாய்குட்டிகளை தாக்கவும் வந்துள்ளது.

நாய்களின் சத்தத்தால் வெளியே வந்து பார்த்த சிறுமி, நாய்க்குட்டிகளை கரடியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வேகமாக ஓடிவந்து கரடியை சுவற்றிலிருந்து தள்ளி விட்டுள்ளார். அது கீழே சாய்ந்த அந்நேரத்தில் தனது நாய்க்குட்டிகளை வேகமாக வீட்டிற்குள் அழைத்து சென்றிருக்கிறாள். பதினேழு வயது சிறுமியின் துணிச்சல் போராட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Join our channel google news Youtube